
1. கிறுக்கல்கள்!
என் இதயக் கண்ணாடியில்
கீறல்களாகக்
கிறுக்கப்பட்ட கவிதை நீ...
அது மறைந்தால்
நான் நொறுங்கிப்போவேன்
நான் உடைந்தால்
அது மறைந்து போகும்...
மரணத்திலும்
நாம் சங்கமிப்போம்...
2. எனக்கே சொந்தம்!
புத்தகங்களை
ஏன் இடதுமார்பில்
வைத்து நடக்கிறேன்
என்கிறாயே தோழி!
சொல்கிறேன் கேள்!
என் இதயத்தினுள்ளிருக்கும்
என்னுயிர்க் காதலரை
வெளியிலுள்ள
வேறு யாரும்
பார்க்கக்கூடாதல்லவா?












